சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் புதைத்து
வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி நடுவண் ரிசர்வ் படை வீரர்கள் 7 பேர் பலியாகினர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம்
நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில், நிர்வாக பணிகளுக்காக நியமிக்கப்பட்ட நடுவண் ரிசர்வ்
படையினர் சாதாரண உடையில் வாகனங்களில் சென்றனர். மாலை 4 மணியளவில் காட்டுப்பகுதியில்
மேலவாடா கிராமத்தில் சென்றபோது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பயங்கர
சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், ஒரு வாகனம் தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது.
இதில், அந்த வாகனத்தில் சென்ற 7 வீரர்களும் உடல்
சிதறி பலியாகினர். கண்ணிவெடி வெடித்த இடத்தில் 4 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.
அந்த வாகனத்தில் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் மாவோயிஸ்டுகள் திருடிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேலும் படைகள் வரவழைக்கப்பட்டன. பாதுகாப்பு படையினர் 7 பேர் பலியான தகவலை உள்துறை
அமைச்சர் சட்டசபையில் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.