Show all

மோடி போன்ற சுயவிளம்பரமோகம் கொண்ட நபர் கூட இதனால் தர்மசங்கடமடைவார்.

மகாத்மா காந்தியைப் போல் பிரதமர் நரேந்திர மோடியும் சபர்மதி நதிக்கரையின் துறவி என்று பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. விஜய் கோயல் தெரிவித்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு எதிரே விஜய் கோயல் சில சுவரொட்டிகளையும், பதாகைகளையும் ஒட்டியுள்ளார். அவற்றில், காந்தியையும், மோடியையும் ஒப்பிட்டு, சில வாசகங்களை வெளியிட்டிருந்தார். அவற்றில்,

காந்தியைப் போல் மோடியும் குஜராத்தின் சபர்மதி நதித் துறவிதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பீட்டுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது தனது சுட்டுரைப் பதிவில் வியாழக்கிழமை கூறியிருப்பதாவது:

பாஜகவின் விஜய் கோயல், மகாத்மா காந்தியுடன் பிரதமரை ஒப்பிட்டுள்ளார்.

இது மோசமான முகஸ்துதியாகும்.

மோடி போன்ற சுயவிளம்பரமோகம் கொண்ட நபர் கூட இதனால் தர்மசங்கடமடைவார் என்று தனது பதிவில் ஷகீல் அகமது கூறியுள்ளார்.

மேலும், ஐக்கிய ஜனதா தளமும், ஆம் ஆத்மி கட்சியும் கோயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து விஜய் கோயல் கூறியதாவது: காந்தியையும், மோடியையும் நான் ஒப்பிடவில்லை. காந்தி நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தார். மோடி ஊழல், வறுமை ஆகியவற்றில் இருந்து விடுவித்துக் கொண்டிருக்கிறார். அவர் நாட்டுக்காக தனது சொந்த வாழ்க்கையைத் துறந்து, துறவியைப் போல் வாழ்ந்து வருகிறார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.