Show all

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவது தன் குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்காது :ஜோதிகா.

36 வயதினிலே படத்திற்கு பிறகு ஜோதிகா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவதால் தன் குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்று ஜோதிகா கூறியிருக்கிறார்.

முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மலையாள ரீமேக்கான ‘36 வயதினிலே’ என்ற படம் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் ஜோதிகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்தாலும் முன்பு இருந்த அதே துறுதுறு நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.இப்படத்தின் வெற்றியையடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறிய ஜோதிகா, தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நிறைய விளம்பரங்களில் நடிக்கவும் ஜோதிகாவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

தற்போது ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக மும்பையில் முகாமிட்டிருக்கிறார். மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவதால் தன் குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்று ஜோதிகா கூறியிருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.