Show all

இந்தியர்கள் யாரும் ஏமன் நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டாம்

இந்தியர்கள் யாரும் ஏமன் நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்று இந்திய வெளியுறத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏமன் நாட்டில் தற்போது தீவிரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பு இல்லை. மேலும் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அண்மையில் ஏடன் நகரில் இந்தியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. எனவே அடுத்த அறிவிப்பு வரும்வரை, எத்தகைய சூழலிலும், எந்த காரணங்களுக்காகவும் ஏமன் நாட்டுக்கு இந்தியர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது எனக் கூறப்பட்டு உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.