Show all

பரபரப்பாகிப் போன சர்கார் பதாகை கிழிக்கப்பட்ட விவகாரம்! ஒருவர் தற்கொலை, ஏழுபேர்கள் மீது வழக்கு

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை தனியார் பதாகை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவர் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊரான  ஈராளச்சேரி கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சர்கார் திரைப்பட பதாகையைச் சிலர் கிழித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மணிகண்டனில் வீட்டுக்கு சென்று சிலர் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,964.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.