மும்பையில் ‘மேக் இன் இந்தியா’
வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நிலைத்த மற்றும் யூகிக்கக்
கூடிய வரி விதிப்புகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார். நிறுவனங்களைப் பொறுத்த வரை தற்போதைய அரசு பல்வேறு
சீர்த்திருத்தங்களைச் செய்ய தயாராக இருப்பதால் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இது
சரியான நேரம். வரி விதிப்பு முறைகளில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். பின்னோக்கிய வரிவிதிப்பு செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளோம்.
உற்பத்தியை அரசு ஊக்குவிக்கும் பொருட்டு, உரிமம் வழங்குதல், பாதுகாப்பு, சுற்றுச் சூழல்
அனுமதி உள்ளிட்டவற்றில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமைபடுத்தியுள்ளோம். இந்த நூற்றாண்டு ஆசியா உடையது என்று தொடர்ந்து நான்
கூறிவருகிறேன். இந்த நூற்றாண்டு உங்களுடையதாக இருக்க வேண்டுமெனில் இந்தியாவை மையமாக
உருவாக்குவதே என்னுடைய ஆலோசனை. அந்நிய நேரடி முதலீட்டிற்கு இந்தியா மிகவும் உகந்த
நாடு. பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அந்நிய நேரடி முதலீடு தற்போது 48 சதவீதமாக
உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவுடைய பொருளாதார வளர்ச்சி தற்போது 7 சதவீதத்திற்கும்
அதிகமாக உள்ளது. வருகின்ற நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று உலக வங்கி ஐ.எம்.எஃப்
உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. 50 நகரங்களில் இதுவரை மெட்ரோ ரயில் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு சாலைகள், துறைமுகம் மற்றும் ரயில்வே உள்ளிட்ட துறைகளின் உள்கட்டுமானத்தில்
வளர்ச்சியைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.