Show all

கேரளத்தில், ஒரு வாக்குச்சாவடியில், வாக்குப் பதிவு நிறுத்தம்! காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு செல்வதாக புகார்

கேரளத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு செல்வதாக புகார் எழுந்து, வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளம் உள்பட 14 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்றது. 
இந்த நிலையில், கோவளம் அருகே அமைக்கப்பட்டிருந்த 151-ஆவது வாக்குச் சாவடியில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்த வண்ணம் இருந்தனர். அப்போது காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜக சின்னத்தில் விளக்கு எரிவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,131.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.