Show all

ஆசிய கூடைப்பந்துப் போட்டி: பாலஸ்தீனத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

ஆசிய கூடைப்பந்துப் போட்டியில் பாலஸ்தீனத்தை 73-70 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

எஃப்ஐபிஏ ஆசிய கூடைப்பந்து போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி, வரும் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், "இ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் பாலஸ்தீன அணியை எதிர்கொண்டது.

இதில், 73-70 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. பாலஸ்தீன அணியில் அபு-ஷமாலா(21 புள்ளிகள்), சானி சகாகினி (23 புள்ளிகள்), இமாத் குவாஸ் (5 புள்ளிகள்) ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய அணி வீரர்களில் அம்ஜயோத் சிங் (32 புள்ளிகள்), அம்ரித் பால் சிங் (14 புள்ளிகள்), விஷேஸ் பிரிகுவான்ஷி (17 புள்ளிகள்) ஆகியோர் எதிரணிக்கு சவால் அளித்தனர்.

3 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி, ஒரு வெற்றி, 2 தோல்விகளைப் பெற்றுள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்திய அணிக்கு இன்னும் ஒரு வெற்றி தேவை. பாலஸ்தீன அணி 2 வெற்றிகள், ஒரு தோல்வியைப் பெற்றுள்ளது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.