Show all

மல்லிகார்ஜூன் பாய்கட் சிவசேனையினரால் கொடூரமாகத் தாக்கப் பட்டார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை செயற்பாட்டாளர் மல்லிகார்ஜூன் பாய்கட், சட்ட விரோதமாக நடக்கும் பல சமூக அநீதிகளைத் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இவர், அண்மையில் இந்த சட்டத்தின் மூலமாக, 14 ஆயிரம் சதுர அடியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடத்தைப் பற்றிய விவரங்களை, நேற்று லத்தூர் நகரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பலப்படுத்தினார்.

இந்நிலையில், இன்று அவரை அங்குள்ள கல்லூரி ஒன்றிற்கு குண்டுகட்டாக தூக்கி வந்த சிவசேனையினர், அங்கு கூடியிருந்த சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் முன்னிலையில் அவரை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கி, அவரது முகத்தில் கருப்பு மையைப் பூசியுள்ளனர்.

குல்கர்னி மீது மை வீசியது உட்பட இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குலைக்கும் வகையில் பல்வேறு கலாச்சார தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் சிவ சேனையினரின் இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்குக் காரணமான சிவசேனா தொண்டர்களைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்யா தாக்கரே இன்று தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.