வரும் சட்ட மன்ற
தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார். மதுரை அருகே உள்ள
திருப்பரங்குன்றத்தில் வீரத்தமிழர் முன்னணி சார்பில் திருமுருகப் பெருவிழா நடந்தது.
அப்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம், தமிழகத்திற்கு விரைவில் சட்ட மன்றத் தேர்தல் வர
உள்ளது. இந்தத் தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல் ஆகும். எனவே, வரும் சட்ட மன்ற தேர்தலில்
234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். இதற்காக பிப்ரவரி
13 ஆம் தேதி கடலூரில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிவிக்கப்பட
உள்ளனர். அதே மேடையில் இருந்தே தேர்தல் பிரசாரம் தொடங்கப்படும் என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.