சங்ககிரி அருகே நாரணப்பன்சாவடி இந்தியன் ஆயில் நிறுவனக் கிடங்கிலிருந்து சனிக்கிழமை மாலை சென்னைக்கு 16 வாகனங்களில் பெட்ரோல், டீசல் எடுத்துச் செல்லப்பட்டன. மழை வெள்ளம் காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் சென்னையில் உள்ள தட்டுப்பாட்டை போக்க சங்ககிரி அருகே உள்ள நாரணப்பன்சாவடி இந்தியன் ஆயில் நிறுவனக் கிடங்கிலிருந்து 16 வாகனங்கள் மூலம் சென்னையில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு விநியோகம் செய்வதற்காக பெட்ரோல், டீசல் எடுத்துச் செல்லப்பட்டன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.