Show all

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

தமிழகத்தைப் போல பீகார் மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் சோகத்தை பீகார் மக்களும் பகிர்ந்து கொள்வார்கள். வௌ;ளத்தால் உயிர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும், உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். அவர்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 கோடிக்கான காசோலையை அனுப்பியியுள்ளேன்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் என நான் உறுதியாக நம்புகிறேன். துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தன்னுடைய முதல் மாத சம்பளத்தை தமிழக வெள்ள  நிவாரண நிதியாக வழங்க முன் வந்துள்ளார்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.