Show all

தமிழக மீனவர்கள் கைது நிலவரத்திற்கு என்றே தனியாக ஒரு இதழ் நடத்தலாம் போல!

தமிழக மீனவர்கள் கைது, சென்னை விமான நிலைய கண்ணாடி உடைவு நிலவரத்திற்கு என்றே தனியாக ஒரு இதழ் தொடங்கினால் கூட செய்தி பஞ்சம் இல்லாமல் தொடர்ந்து நடத்தலாம் போல!

     நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனைத்  தொடர்ந்து அண்மையில் தமிழக மீனவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் கைப்பற்றப்பட்டுள்ள படகுகளையும் மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

 

இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் இன்று இலங்கை கடற்படையால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி மீனவர்களின் ஒரு படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளது குறிப்பிடதக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.