Show all

பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது

ஜிகிர்தண்டா படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர் பாபி சிம்ஹா. சமீபத்தில் வெளியான மசாலா படத்தில் வில்லனாக நடித்தார்.

தற்போது கோ-2, உறுமீன், பாம்பு சட்டை உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ள . உறுமீன் படத்தில் பாபிசிம்ஹா ஜோடியாக இனிது இனிது படத்தில் அறிமுகமான  ரேஷ்மி மேனன் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து பாபிசிம்ஹா- ரேஷ்மிமேனன் நெருங்கி பழகினார்கள். இவர்கள் காதல், திருமணத்தை நெருங்கி இருக்கிறது.

பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் காதலை  இரு குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து இவர்கள்  திருமண நிச்சயதார்த்தம் வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் நடைபெறுகிறது. இருவரும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்கள். எனவே திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.

பாபி சிம்ஹா, ரேஷ்மியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.