வரும் 2017-ம் ஆண்டு சனவரி மாதத்திற்குள் அனைத்து
ராணுவ வீரர்களுக்கும் குண்டு துளைக்காத உடை வழங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையின் போது ராணுவ வீரர்கள் அதிகளவில் உயிரிழக்க நேருகிறது.
இதனைத் தவிர்க்கும் நோக்கிலும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் குண்டு துளைக்காத உடைகளை
வழங்க ராணுவம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ரூ. 140 கோடியில் 50,000 குண்டு துளைக்காத
ஆடைகளை வீரர்களுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் வரும் ஆகஸ்ட் மாதம்
முதல் விநியோகிப்பட உள்ளன. 2017-ம் ஆண்டு சனவரிக்குள் ராணுவ வீரர்கள் அனைவருக்கும்
குண்டு துளைக்காத உடை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.