Show all

பாஜகவினர் அனைவரும் பயிரை மேயும் வேலிகள்! பாது காவல் ஆளிகள் அல்லர்: இராகுல்காந்தி

பாஜகவினர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக திடீரென தங்களுக்குத் தாங்களே பாதுகாவலர்கள் என்ற பொருளில் ஒவ்வொருவரும் சௌக்கிதார் என்று ஹிந்தியில் பட்டமளித்துக் கொள்வதை, பாஜகவினர்- காவலாளிகள் அல்லர் திருடர்கள் என்று கடுமையாக சாடுகிறார் இராகுல்காந்தி. 

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்தபோது பா.ஜனதா தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார் என வருமான  வரித்துறையில் சிக்கிய குறிப்பேட்டில் தகவல் உள்ளது என இதழியல் செய்தி வெளியாகியது. மொத்தம் ரூ. 1,800 கோடி சென்றுள்ளது என குறிப்பிடப்பட்ட செய்தியை மையப்படுத்தி, விசாரணையை மேற்கொள்ளாதது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. 

ஆனால் எடியூரப்பா,  காங்கிரஸ் தலைவர்களின் இந்தக் குற்றச்சாட்டு உண்;மையல்ல என்று மறுக்கிறார் 

பா.ஜனதா தலைமைக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ரூ.1,800 கோடி கொடுத்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கீச்சுவில் வெளியிட்ட செய்தியில், 'பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள். நரேந்திர மோடி, அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங்' என்று சாடியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,100.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.