உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரில் உள்ள பகுதியில்
வசித்து வந்த ஒரு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 10 ஆம் தேதி, திடீரென காணாமல்
போனார். இதனையடுத்து, அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் காவல்
நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்து அந்த மாணவியைக் காவல்துறையினர்
தேடிவந்தனர். இந்நிலையில்,
உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் வசிக்கும் வீட்டின் அருகே,
அந்த மாணவியின் சடலத்தை காவல்துறையினர் இன்று கண்டுபிடித்துள்ளனர். அந்தப் பெண்ணைக் கற்பழித்து, அதன்பின் கொலை செய்து
யாரோ அந்த இடத்தில் அவரை புதைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, முழுமையான விசாரணையைக் காவல்துறையினர் தொடங்க உள்ளார்கள். முதலமைச்சர் வீட்டின் அருகிலேயே, ஒரு பெண்ணின் பிணம்
மீட்கப்பட்ட விவகாரம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.