Show all

அஜய் அகர்வால் மோடிக்கு திறந்த மடல்! தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது

அஜய் அகர்வால் மோடிக்கு திறந்த மடல் ஒன்று எழுதியுள்ளார். அதில் மோடி மீது பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கியுள்ளார். இந்தக் கடிதம் பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தளவில் நியாயமாக நடைபெற்றால் பாஜக வெறும் 40 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெறும் என்று அஜய் அகர்வால் மோடிக்கு திறந்த மடல் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
அந்தக் கடிதத்தில் பண மதிப்பிழப்பு குறித்து குறிப்பிட்டுள்ள அஜய் குறைந்தது 5 லட்சம் கோடிகளாவது திரும்பி வராது என்று நீங்கள் (மோடி ) எதிர்பார்த்தீர்கள் ஆனால் 99விழுக்காடு பணம் திரும்பி வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டிலேயே நீங்கள்தான்(மோடி) புத்திசாலி அதனால்தான் யாரையும் கலந்தாலோசிக்காமல் அரசையும் தயார் நிலையில் வைக்காமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தீர்கள் என்று கடுமையாக அந்த கடிதத்தில் அஜய் அகர்வால் கூறியுள்ளார். இந்த கடிதம் பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அத்வானி குடியரசுத் தலைவராக தேர்வுசெய்யப்படவேண்டும் என நாடே எதிர்பார்த்த நிலையில் ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவர் வேட்பாளாராக பாஜக தலைமை அறிவித்தது. நன்றி கெட்டவர் மோடி என்று கூறியுள்ளார் அகர்வால். 
அதோடு, குஜராத் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற தான்தான் காரணம் என குறிப்பிட்டுள்ள அஜய் அகர்வால், குஜராத் தேர்தலின்போது ஜங்க்புராவில் மணி சங்கர் அய்யர் வீட்டில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் தலைமைஅமைச்சர் மன்மோகன் சிங், பாகிஸ்தானிய அதிகாரிகள் இடையே சந்திப்பு நடைபெற்றது என்பதை கூறியது நான்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை குறிப்பிட்டு தேசப்பாதுகாப்பு குறித்தும் கருத்துப்பரப்புதல் மேடைகளில் மோடி பேசி வந்தார். இதன் காரணமாகவே குஜராத்தில் படு தோல்வியடைய இருந்த பாஜக அங்கு வெற்றி பெற்றது என்று கூறியுள்ளார்.
இந்த விவரங்களை அஜய் வெளியிட்டதால்தான் குஜராத்தில் பாஜக வென்றதாக ஆர்எஸ்எஸ்எஸ் அமைப்பு ஒப்புக் கொண்டதாகவும், அதற்கு ஆதாரமாக தன்னுடன் ஆர்எஸ்எஸ்எஸ் தலைவர் தத்தத்ரேயா ஹோசபலே பேசிய கேளொலி ஆதாரம் உள்ளதாகவும் அஜய் குறிப்பிட்டுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,125.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.