தலித்துகள் மீது அடக்குமுறையை ஏவி வரும் பாஜகவுக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலித் இளைஞர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் இவ்வாறு கூறினார். குஜராத்தில் உள்ள பாஜக அரசு தலித்துகளுக்கு எதிரானது என்ற கெஜ்ரிவால், மேலும் தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமை செய்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றார். குஜராத்தில் தலித்துக்கள் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் மீது மாநில பாஜக அரசு வழக்கு பதிவு செய்வதில்லை என கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.