Show all

மதிமுக சார்பில் நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது என வலியுறுத்தி மதிமுக சார்பில் நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசின் தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும்,

அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படக்கூடாது என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

மேலும், தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணிக்கும் செயலிலும் இந்திய அரசு ஈடுபடக்கூடாது

என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை சந்திப்பில் நடந்த இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைகோ தலைமையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். ​

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.