Show all

நடிகை ரோஜா புதிய கட்சி தொடங்குகிறாரா! எதிர்பார்ப்பில் ஆந்திரம்

ஐந்து துணை முதல்வர்களோடு, ஆந்திராவில் ஆட்சி பொறுப் பேற்றிருக்கிற ஒய்எஸ்ஆர் காங்கிரசில், தனக்கு போதிய அங்கீகாரம் இல்லாததாகக் கருதும் ரோஜா, புதிய கட்சி தொடங்குவார் என்கிற எதிர்பார்ப்பு ஆந்திரத்தில் பரவலாக காணப்படுகிறது. 

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகை ரோஜா ஏறத்தாழ கடந்த பத்து ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வரும் பிரபலம் என்பதால், கட்சியில் அவருக்கு உறுதியாக துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று கட்சியினரில் பெரும்பாலோர் எதிர் பார்த்து வந்த நிலையில், சாதி அடிப்படையில் ஐவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் பட்டது. ஆனால் ரோஜாவிற்கு எந்தப் பதவியும் அறிவிக்கப் படாத நிலையில், ரோஜாவிற்கும், ரோஜா ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியளித்தது. 

ரோஜா இரண்டாவது முறையாக நகரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்கிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு ரோஜா கடுமையாக உழைத்தவர். அவருக்கு முதன்மையான பதவி கொடுக்காவிட்டால் எப்படி? என்று அவரின் ஆதரவாளர்கள் கொடி பிடித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு சட்டப்பேரவைத் தலைவர் பதவி தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. ஒருவேளை சட்டப் பேரவைத்தலைவர் பதவியும் தராத பட்சத்தில் ரோஜா புதுக்கட்சி தொடங்கியாக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆனால் ரோஜா உறுதியான தகவல் எதுவும் வெளியிடவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,178.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.