இந்திய விமானப்படையின் 83- வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது, விமானப்படை தினத்தை முன்னிட்டு நமது விமானப்படை வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்கள் எப்போதும் மிகுந்த தைரியத்துடனும் உறுதியுடனும் இந்தியாவிற்காக உழைத்து வருகின்றனர். விமானப்படையின் பங்களிப்பு அளப்பரியது. வான்வெளியாக நம்மை பாதுகாப்பதுடன், பேரிடர் காலங்களிலும் அவர்கள் முதன்மையாக உள்ளனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.