Show all

ஜஸ்பா படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஐஸ்வர்யா ராய்.

ஐந்து வருடங்கள் கழித்து ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள படம், ஜஸ்பா நவம்பர் 2011-ல் ஐஸ்வர்யா ராய்க்குக் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இப்போது ஜஸ்பா படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சஞ்சய் குப்தா இயக்கியுள்ள இந்தப் படத்தில் இர்ஃபான் கான், ஷப்னா ஆஸ்மி, ஜாக்கி ஷெராப் போன்றோர் நடித்துள்ளார்கள். வரும் வௌ;ளிக்கிழமை வெளியாகிறது.

ஐஸ்வர்யா ராய் ஒரு பேட்டியில்,

சினிமா வியாபாரத்துக்கு இது சரியான நேரம். இப்போது பாதுகாப்பு உருவாகியுள்ளது. பணம் முதலீடு செய்பவர்களுக்கு குறிப்பிட்ட தொகை நிச்சயம் கிடைக்கும் என்கிற நிலைமை உருவாகியுள்ளது. அதனால் படம் தயாரித்து நஷ்டமடைகிற போக்கு இனி இருக்கக்கூடாது. சரியாகத் திட்டமிட்டால் எந்தப் படமும் தோல்வி அடையாது.

முன்பு ஒரு படத்தை ஹிட் என நினைப்போம். ஆனால் பணம் தயாரிப்பாளருக்குக் கிடைக்க 2 வருடங்களாகும் என்று பிறகு தெரியவரும். ஆனால் இப்போது படங்கள் எடுக்க சரியான தருணம் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.