Show all

பஞ்சாப் விமானப் படை தளத்தில் நுழைந்த 4பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் நிகழ்ந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-மொஹம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் பஞ்சாப் விமானப் படை தளத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது இந்தியப் பாதுகாப்புப் படையினர் சரியான பதில் தாக்குதல் நடத்தியதாகவும், மேலும் சில தீவிரவாதிகள், பக்கத்தில் உள்ள இடங்களில் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர சோதனை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்திய விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.

பஞ்சாப் மாநில எல்லைக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாக நேற்றே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.