Show all

ஜார்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

ஜார்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து நேற்று இரவு டமாரா காட்டி என்ற பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

 

பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்ததை அறிந்த மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்டுகள் தாக்குதலைப் பாதுகாப்பு படையினர் எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 4 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தியதில் 2 பாதுகாப்பு படையினர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.