Show all

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அக்டோபர் 18-ந் தேதி தேர்தல்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அக்டோபர் 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று நீதிபதி பத்மநாபன் அறிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவடைந்ததையொட்டி, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. முதலில் கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்கத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தத் தேர்தலை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர;நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக உயர;நீதிமன்றம் நியமித்தது.

இந்த நிலையில், நடிகர் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் பட்டியலை சங்கத்தின் பதிவாளர், நீதிபதி பத்மநாபனிடம் வழங்கினார். பட்டியலில் ஓட்டுப்போட தகுதி உள்ளவர்களாக 3,139 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். ஓட்டுப்போட தகுதி இல்லாதவர்களாக 296 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்த பட்டியலை நீதிபதி பத்மநாபன் ஆய்வு செய்தார் பின்னர் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் அக்டோபர் 18-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெறும்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.