Show all

ராணுவ முகாமில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 12 ஜவான்கள் காயமடைந்தனர்

ஸ்ரீநகர் - தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் ராணுவ முகாமில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 12 ஜவான்கள் காயமடைந்தனர். இதில் 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து ராணுவ அதிகாரி தெரிவிக்கையில், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபுரா பகுதியில் இருக்கும் கோர் பாட்டில் பள்ளியில் எதிர்பாராமல் நடந்த வெடி விபத்தில் 12 ஜவான்கள் காயமடைந்தனர்.

இதில் படுகாயமடைந்த 7 பேர் மேல் சிகிச்சைக்காக பதமிபக் முகாமில் உள்ள ராணுவ மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்கள் தவிர்த்து காயமடைந்த மற்றவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் நிலை தற்பொழுது நலமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த வெடிவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும், இது விபத்தாக இருக்கலாம், மேலும் விசராணைக்கு பின் உண்மையான காரணம் தெரியவரும். அதுவரை எதுவும் கூறமுடியாது என்றும்  கூறினார்


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.