Show all

வில்லன் தேடும் வேட்டையைத் தொடங்கியுள்ளார் ஷங்கர் எந்திரன் 2 படத்திற்காக

எந்திரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு எந்திரன் 2 படத்தில் மீண்டும் ஷங்கரும் ரஜினியும் இணைகிறார்கள். ஏமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்-டிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஷங்கர். ஆனால், அவர் தன்னுடைய சம்பளமாக 120 கோடி வரை கேட்டுள்ளார். பெரிய பட்ஜெட் படம் என்பதால் அவர் தன்னுடைய சம்பளத்தைக் குறைக்க முன்வரவில்லை. இதனால் அர்னால்ட் வேண்டாம் என ஷங்கர் முடிவெடுத்துள்ளார்.

இப்போது பாலிவுட்டிலிருந்து ஒரு வில்லனைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தனது புதிய தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளார் ஷங்கர். கபாலி படப்பிடிப்பு முடிவடைந்தபிறகு ரஜினி, உடனே எந்திரன் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். எனவே விரைவில் வில்லன் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.