Show all

85-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்

லிபியாவில் நிலவி வரும் உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் அங்கிருந்து வெளியேறிய அகதிகள் சிலர், கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்களை இத்தாலி கடற்படையினர் கைது செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி லிபியாவின் மத்திய தரை கடல் பகுதியின் ஸுரா பகுதியில் 500-க்கும் மேற்பட்ட அகதிகளுடன் சென்ற மரக்கப்பல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 85-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.