Show all

சென்னை பல்கலையில் அரசியல் அறிவியல் துறையில் பயின்று வரும் அனைத்து மாணவர்களும் இடைநீக்கம்

சென்னை பல்கலையில் அரசியல் அறிவியல் துறையில் பயின்று வரும் அனைத்து மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்படுவதாக பல்கலை பதிவாளர் அறிவித்துள்ளார்.

பல்கலைப் பேராசிரியர் ராமு மணிவண்ணனுக்கு ஆதரவாகப் போராடியதாகக் கூறி அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் அனைவரையும் இடை நீக்கம் செய்து பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் அனைவரும் தங்களது அறைகளை காலி செய்யவும் பல்கலை பதிவாளர் உத்தரவில் கூறியுள்ளார்.

மறு அறிவிப்பு வரும் வரை மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.