இன்று காலை 9 மணி அளவில் தெற்கு டெல்லி பர்தார்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ கார் திடீரென நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரின் என்ஜின் இருக்கும் பின் பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியதும் சாமர்த்தியமாக காரில் இருந்த ஓட்டுனர் கதவை திறந்துக்கொண்டு தப்பிவிட்டார்.
அதிநவீன பதுகாப்பு வசதியும், உயர்ந்த தொழில்நுட்பங்களும் கொண்ட லம்போர்கினி கார் பற்றி எரிந்தது பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.