Show all

மக்களை மட்டுமல்ல அந்த கடவுளையும் முட்டாளாக்கி விடுவார் மோடி

மக்களை மட்டுமல்ல அந்த கடவுளையும் முட்டாளாக்கி விடுவார் மோடி என்று பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் கடுமையாக தாக்கி உள்ளார்.

இது தொடர்பாக பாட்னாவில் வர்த்தக சபையினரிடம் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கூறும்போது, கடந்த 15 மாத பா.ஜ.க. ஆட்சியில் ஒரே ஒரு வாக்குறுதியை நிறைவேற்றினார்கள் என்பதற்கான ஆதாரத்தை மோடி அரசால் காட்ட முடியுமா? பீகாருக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளதில் புதியதாக எதுவும் இல்லை. பழைய திட்டங்களையே திரும்ப கூறி மோடி மக்களை ஏமாற்றுகிறார். மோடி அனைத்து மக்களை மட்டுமல்ல, அந்த கடவுளையும் முட்டாளாக்கும் வித்தை தெரிந்தவர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பீகாருக்கு சிறப்பு நிதியை அறிவித்துள்ள மோடி, அடுத்த 3 மாதங்களுக்கு இதைப்பற்றிதான் பேசிக் கொண்டிருப்பார். அடுத்து வரும் பொது நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படும் போது, அவரது வாக்குறுதிகள் காற்றில் காணாமல் போய்விடும். அதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த மதவாத சக்திகளுக்கு இடம் அளிக்காமல் அமைதியாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடக்க நாம் போராட வேண்டும். என் உயிர் இருக்கும் வரை மதவாத சக்திகள் பீகாரை ஆட்சி செய்ய விடமாட்டேன். பகவான் கிருஷ்ணரை போல், நானும் இந்த மதவாத சக்திகளை அழிப்பேன். நான் ஏழைகளுக்காகவும், எளியவர்களுக்காகவும் குரல் கொடுப்பதால், அவர்கள் என் ஆட்சியை காட்டுமிராண்டி ஆட்சி என்கின்றனர். அவர்கள் பயப்படுவதால் அப்படி கூறிகின்றனர். அவர்களின் எண்ணங்களை, சாதி பிரிவினைகளை மாற்ற வேண்டிய நேரம் இது என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.