Show all

ஹிமாச்சல் பிரதேசத்தில், குலு மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு

ஹிமாச்சல் பிரதேசத்தில், குலு மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 8 பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இமாச்சலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்குள்ள குலு மாவட்டத்தில் மணிக்கார என்ற இடத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தகவலறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.