Show all

நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை பற்றி கருத்து கூற ராகுல் காந்தி; மறுப்பு

இன்று அரசியலுக்கான நாள் இல்லை என்று கூறி பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை பற்றி கருத்து கூற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் மறுப்பு தெரிவித்துவிட்டனர். நாட்டின் 69- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த உரையில், தனது ஓராண்டு கால ஆட்சியில் மத்திய அரசு செய்த சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை குறித்து இன்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ராகுல் காந்தி, பிரதமரின் உரை குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.இன்று அரசியல் பேசுவதற்கான நாள் இல்லை. பிரதமர் உரை குறித்து நாங்கள் நாளை கருத்து கூறுகிறோம் என்றார்.

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றிய அக்கட்சி தலைவர் சோனியா காந்தியும், செய்தியாளர்களுக்கு வெறும் சுதந்திர தின வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துவிட்டு வேறு எதைப்பற்றியும் பேச மறுப்பு தெரிவித்துவிட்டு சென்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.