Show all

பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்து மீறி துப்பாக்கி சூடு நடத்தினர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்து மீறி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவம் இன்று மட்டும் மூன்றாவது முறையாக இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வங்கதேசம்-இந்திய எல்லைகளில் இனிப்புகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஆனால் இந்திய-பாகிஸ்தான் எல்லைகளில் இனிப்புகளும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை. மூன்றாவது நாளாக வெவ்வேறு பகுதிகளில் உள்ள இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.