வங்கி சேவைகளுக்கு மீனவர்கள் அலைகழிக்கப்படுவதால், அலுவலர்களை வங்கியின் உள்ளே வைத்து பூட்டி, மீனவ பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழவேற்காடு, பஜார் பகுதியில் செயல்படும் இந்தியன் வங்கியில், மீனவ மக்கள் புதிய கணக்கு துவங்குதல்; முதியோர் உதவித்தொகை பெறுதல்; வங்கி கணக்கு புத்தகங்களில் கணக்கு விவரங்களை பதிவேற்றுதல் உள்ளிட்டவற்றிற்காக அலைகழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, வங்கிக்கு சென்ற பெண்களை, அதிகாரி ஒருவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால், மீனவ பெண்கள், நேற்று மாலை, 5:00 மணிக்கு, வங்கி அலுவலகத்தின் வெளிப்புற கதவை பூட்டி, அலுவலர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருப்பாலைவனம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினர். இதையடுத்து, இரவு, 7:00 மணிக்கு, போராட்டம் கைவிடப்பட்டு, வங்கி கதவு திறக்கப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.