Show all

அலுவலர்களை வங்கியின் உள்ளே வைத்து பூட்டி, மீனவ பெண்கள் போராட்டம்

வங்கி சேவைகளுக்கு மீனவர்கள் அலைகழிக்கப்படுவதால், அலுவலர்களை வங்கியின் உள்ளே வைத்து பூட்டி, மீனவ பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழவேற்காடு, பஜார் பகுதியில் செயல்படும் இந்தியன் வங்கியில், மீனவ மக்கள் புதிய கணக்கு துவங்குதல்; முதியோர் உதவித்தொகை பெறுதல்; வங்கி கணக்கு புத்தகங்களில் கணக்கு விவரங்களை பதிவேற்றுதல் உள்ளிட்டவற்றிற்காக அலைகழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று, வங்கிக்கு சென்ற பெண்களை, அதிகாரி ஒருவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால், மீனவ பெண்கள், நேற்று மாலை, 5:00 மணிக்கு, வங்கி அலுவலகத்தின் வெளிப்புற கதவை பூட்டி, அலுவலர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருப்பாலைவனம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினர். இதையடுத்து, இரவு, 7:00 மணிக்கு, போராட்டம் கைவிடப்பட்டு, வங்கி கதவு திறக்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.