Show all

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை நிறுத்தம்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை நிறுத்த அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. வாக்காளரிடம் இருந்து ஆதார் எண்ணை கேட்க வேண்டாம் எனவும் ஆதார் எண்ணை கேட்கும் தேர்தல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரசு திட்டங்களை பெற ஆதார் எண் அவசியமல்ல என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது, உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து ஆதாரை இணைக்கும் பணியை நிறுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.