Show all

பங்கஜா முண்டே, தனது செருப்பை தூக்கி வர ஆள் வைத்திருப்பதாக அடுத்த சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ள

குழந்தைகளுக்கான அங்கன்வாடி உணவில் ஊழல் செய்ததாக கடும் விமரிசனங்களுக்கு ஆளான மகாராஷ்டிர ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பங்கஜா முண்டே, தனது செருப்பை தூக்கி வர ஆள் வைத்திருப்பதாக அடுத்த சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் வறட்சி நிலையை ஆய்வு செய்யச் சென்ற பங்கஜா முண்டேவின் செருப்பை, அவரது தனி உதவியாளர் எடுத்துக் கொண்டு உடன் சென்றது ஊடகங்களில் வெளியானது.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கால் செருப்பை தூக்கிச் செல்லக் கூட அமைச்சர் ஆள் வைத்திருப்பதாகக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.