Show all

தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனக் கேட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்க

எழுபது மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனக் கேட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் வியாபம் ஊழலில் 70 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இவர்கள் அனைவரும் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்ட நடவடிக்கைகளால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதால் தங்களின் எதிர்காலம் இருண்டுள்ளதாகவும், அதனால் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த கடிதத்தின் நகல்கள் பிரதமர் அலுவலகம், தலைமை நீதிபதி, மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், தேசிய மனித உரிமைகள் ஆணையம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.