Show all

எல்லையில் பாதுகாப்பு படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தாக்குதல்

எல்லையில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பபாக்கி சூட்டில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் திவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.அப்போது அங்கிருந்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.