கேரள பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தப்படும் அறிவியல் போட்டியில், முதலிடம் பெறுபவருக்கு கேரள பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தப்படும் அறிவியல் போட்டியில், முதலிடம் பெறுபவருக்கு வழங்கப்படும் தங்கக் கோப்பைக்கு, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து கேரள மாநில கல்வி அமைச்சர் பி.கே. அப்து ராப் கூறியதாவது: பல்வேறு துறைகளில் மக்களின் குடியரசுத் தலைவரான கலாம் முத்திரை பதித்ததை நினைவு கூரும் வகையில் விருது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பிரபல சிற்பி கணயி குஞ்ஞிராமன், அப்துல் கலாம் கோப்பையை வடிவமைக்க உள்ளார்.
மாநிலம் முழுவதிலும் இருந்து பள்ளி மாணவர்களிடம் தலா ரூ. 1 வசூல் செய்ததில் ரூ.44 லட்சம் வசூலானது. அந்தத் தொகையைக் கொண்டு கலாம் கோப்பை வடிவமைக்கப் படுகிறது என்று பி.கே. அப்து ராப் தெரிவித்தார்.
வழங்கப்படும் தங்கக் கோப்பைக்கு, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.