Show all

காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரின் தடையை திரும்ப பெற தயார் வெங்கைய நாயுடு

மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் 5 நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரின் தடையை திரும்ப பெற தயாராக உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் வெங்கைய நாயுடு  பேசிய போது எதிர்க்கட்சிகளான இடதுசாரி சமாஜ்வாதி, மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தை திரும்ப பெறவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கோஷம் இடுவது, கூச்சல் குழுப்பம் ஏற்படுத்துவது பிரச்னைக்கு தீர்வாகாது. விவாதத்துக்கு வருமாறு வலியுறுத்தினார்.

பின்னர் பேசிய வெங்கைய நாயுடு, சபாநாயகரை சந்தித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையை நடத்த ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தால் இடை நீக்கத்தை ரத்து செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.