Show all

ரொமான்ஸ், ஆக்சன் என வித்தியாசமாக இந்த படத்தில் நிகில்கல்ராணி கலக்குவார்

ஜி.வி.பிரகாஷ் அறிமுகமாகிய 'டார்லிங்' படத்தின் நாயகி நிகில்கல்ராணி , அந்த படத்தை அடுத்து பாபிசிம்ஹாவுடன் 'கோ 2' மற்றும் ஜீவாவுடன் 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் எழில் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நடிக்கவுள்ளதை நேற்று நிகில்கல்ராணி உறுதி செய்துள்ளார்.

SIIMA விழாவில் கலந்து கொள்ள துபாய் சென்றுள்ள நிகில்கல்ராணி, அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், 'எழில் படத்தில் விஷ்ணு ஜோடியாக நான் நடிக்கவிருப்பது உண்மைதான். இந்த படத்தில் நான் போலீஸ் கேரக்டரில் நடிக்கின்றேன். அதுமட்டுமின்றி இந்த படத்தில் எனக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன' என்று கூறியுள்ளார்.

.ஏற்கனவே நிகில்கல்ராணி மலையாள படம் ஒன்றிலும், 'யாகாவராயினும் நா காக்க' என்ற படத்திலும் சிறு சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் சீரியஸான சண்டைக்காட்சிகளில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் துபாயில் இருந்து சென்னை திரும்பியதும் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரொமான்ஸ், ஆக்சன் என வித்தியாசமாக இந்த படத்தில் நிகில்கல்ராணி கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.