Show all

தமிழகத்தில் ஊழல் மலிந்திருப்பதால் வளர்ச்சியை பெற முடியவில்லை அமித்ஷா

தமிழகத்தில் ஊழல் மலிந்திருப்பதால் வளர்ச்சியை பெற முடியவில்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மதுரையில் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையும், சுதேசி இயக்கமும் இணைந்து நடத்தும் பிரதிநிதிகள் மாநாடு ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார்.

தமிழகத்தில் ஊழல் ஒழிந்தால் வளர்ச்சியடைந்த முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும். நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. வளர்ச்சியும் ஊழலும் ஒன்றாக இருக்க முடியாது. நான் இரண்டாவது முறையாக மதுரைக்கு வந்துள்ளேன். தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமாக மாற வேண்டும். தமிழக முன்னோர்களின் செல்வத்தின் அடையாளமாக மீனாட்சி அம்மன்கோவி்ல் உள்ளது.

தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் பட்டியலில் இருந்தாலும், ஊழல் மிகுந்த மாநிலங்களின் பட்டியலில் இருப்பதால் வளர்ச்சியை எட்ட முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.