Show all

மோடிக்கு பதவியேற்ற முதல் நாளிலிருந்து அவருக்கு அக்னிப்பரீட்சைதான்

தொடர் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் ஊழல் புகார்களால் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், பதவியேற்ற முதல் நாளிலிருந்து அவருக்கு அக்னிப்பரீட்சைதான் என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் கூறியுள்ளார்.

ஜாம்ஷெட்பூரில் இன்று நடந்த பொதுமக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ், வரவிருக்கும் பீகார் தேர்தல் மற்றும் மோடி மீதான எதிர்க்கட்சியினரின் விமர்சனம் குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘நரேந்திர மோடி, பிரதமர் அலுவலகத்திற்கு வந்த முதல் நாளிலிருந்தே அக்னிப்பரீட்சையை சந்தித்து வருகிறார். இந்த அக்னிப்பரீட்சையின் பின்னணியில் 60 ஆண்டுகால மோசமான காங்கிரஸ் ஆட்சி உள்ளது’ என்றார்.

மேலும், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் பீகார் தேர்தலில் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.