Show all

தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

காந்தியவாதி சசி பெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்கிற வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மதுவிலக்கு வேண்டும் என்று போராடி வந்த சசிபெருமாள் கடந்த வாரம் கன்னியாகுமரியில் போராட்டத்தின் போது உயிர் துறந்தார். இவரின் மரணத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று சசி பெருமாள் குடும்பத்தினர் 5 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இன்னமும் சசி பெருமாள் உடலையும் பெற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் தந்தையின் மரணத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு வரும் 13ம் திகதிக்குள் மனுதாரரின் மனுவுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.