Show all

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 15 வயது சிறுவன் ஒருவன் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய நிலை மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை 5 மணியளவில், அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பர்க்கவாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 15 வயது சிறுவன் ஒருவன் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டிற்கு எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.