Show all

100 இடங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு சில கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில்,சென்னையில் 100 இடங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் மதுவுக்கு எதிராகப் போராடிய காந்தியவாதி சசி பெருமாள் மரணத்துக்குப் பிறகு,தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று தமிழகம் முழுக்க முழு அடைப்புப் போராட்டம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் கலவரம் நடக்க வாய்ப்புள்ள 100 இடங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் மதுக்கடைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இருப்பினும் கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல இயங்கியது.

பேருந்துகளும் வழக்கம்போல இயங்கின. ஒரு சில இடங்களில் முழு அடைப்பு கடைப்பிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.