Show all

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து இன்று அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து இன்று அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் ஆங்காங்கே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மாணவர்கள் அமைப்புக்களும் இதே போன்று மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மதுகடைகளை அடித்து நொறுக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் தமிழகத்தின் சில மாவட்டங்கள் போர்க்கள பூமியாக காட்சி அளிக்கிறது.ஆங்காங்கு போலீசார் கூடுதலாக பாதுகாப்புக்கு போடப்பட்டு உள்ளனர்.

இன்னமும் காந்தியவாதி சசி பெருமாள் உடலையும் உறவினர்கள் வாங்கிக்கொள்ள மறுத்து வருவதால், மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் தீவிரப் படுத்தி வருகின்றனர்.வைகோ, விஜயகாந்த், இவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டவர்களும் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருவதால் போராட்டம் மேலும் வலுவடைந்து வருகிறது.

இதையடுத்து ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில். தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்குக் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் சட்டப்பேரவை தலைமைச் செயலர். காவல்துறை உயரதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர் என்று தெரிய வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.