Show all

உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர்மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உத்தரபிரதேச மாநிலம் கானுஜி மாவட்டத்தில் உள்ள பாயின்பூரா பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திர சதுர்வேதி. மூத்த பத்திரிகையாளரான இவரது மகன் ராஜா சதுர்வேதியும், பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று பிற்பகல் ராஜா சதுர்வேதி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், ராஜா மீது திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டார்.சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜா சதுர்வேதியின் உறவினர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ராஜா சதுர்வேதியின் வீடு சோகக் கடலில் மூழ்கியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.